இந்திய கடற்படை தினம் - சாகசங்களை நிகழ்த்தி காட்டிய வீரர்கள்...

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் கடல் பகுதியில் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் சாகசம் நிகழ்த்தி காட்டினர்.

Update: 2018-12-03 23:15 GMT
இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, முதல் முறையாக  ராமேஸ்வரம் கடல் பகுதியில் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் சாகசம் நிகழ்த்தி காட்டினர். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடன், நிகழ்ந்த போரில் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக, இந்திய கடற்படை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, விமானப்படைக்கு சொந்தமான சேட்டக்  ரக ஹெலிகாப்டர்கள் பல்வேறு  சாதனைகளை  நிகழ்த்தி  காண்பித்தன . சாகச நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகளும்  பள்ளி மாணவ-மாணவிகள் என பலரும் கண்டு ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்