கஜா புயல்: சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-11-25 10:20 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க  முடிவு செய்துள்ளனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், முறிந்த தென்னை மரங்களுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தென்னை மரங்கள் தலை பகுதி மற்றும் வேர் பகுதி தனித்தனியாக முறிந்துள்ளதால் மீண்டும் உயிர் கொடுக்க முடியாது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்