கஞ்சா கொண்டு வந்த இரண்டு இளைஞர் கைது...

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாகன சோதனையின் போது இரண்டு இளைஞர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.

Update: 2018-11-24 06:06 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரண்டு இளைஞர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால்  மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரிக்கு வரும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த பார்சலில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்