சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய அமைச்சர்

உடுமலை அருகே சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தீயணைப்புதுறை வீரர்களுடன் சேர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அகற்றியதோடு போக்குவரத்தை சரிசெய்தார்.

Update: 2018-11-16 13:15 GMT
திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே ஆனைமலை செல்லும் சாலையில் சூறாவளி காற்றால் பெரிய மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தன. இதையறிந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தீயணைப்பு துறை வீரர்களோடு சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார். மரம் அறுக்கும் இயந்திரத்தின் உதவியோடு சில மணி நேர முயற்சிக்கு பிறகு மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்