பழ.நெடுமாறன் புத்தகத்தை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-14 07:23 GMT
தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் இருந்து, 2006ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் விசாரித்தார்.  இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ள புத்தகங்களை திரும்ப வழங்க மறுத்ததோடு, அந்த புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்