10 டன் தேங்காயுடன் லாரி கடத்தல் : கடத்தல்காரர்களை காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ் கருவி

பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு மனோகரன் என்பவர் லாரியில் 10 டன் தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.

Update: 2018-11-14 03:31 GMT
பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு மனோகரன் என்பவர் லாரியில் 10 டன் தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். நெகமம்-பல்லடம் ரோட்டில் சென்ற லாரியை காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்து அதில் ஏறியதுடன், மனோகரனை அடித்த தள்ளிவிட்டு லாரியை கடத்தியுள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர் அளித்த தகவலின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். லாரியில் உள்ள ஜிபிஎஸ் கருவி உதவியுடன் போலீசார் லாரியை கண்டுபிடித்தனர்.கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்