திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.

Update: 2018-11-12 21:06 GMT
கன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில் மாயமான மணமகன் சதீஷின் புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சதீஷ் மாயமானது குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், தக்கலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாயமான சதீஷை மீட்டு தரவும், அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யவும் கோரிக்கை விடுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்