வேளாண் பல்கலைகழக துணைவேந்தராக குமார் நியமனம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-11-12 14:23 GMT
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலக்கழக வேந்தரும், தமிழக ஆளுனருமான பன்வாரிலால் ரோகித் பிறப்பித்துள்ளார். தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக  பணியாற்றி வந்த குமார் 22 ஆண்டுகாலம் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர் ஆவார். இவர் 3 ஆண்டு காலம் துணை வேந்தராக பதவி வகிப்பார். பேராசிரியர் குமார், ஆளுநரை நேரில் சந்தித்து, நியமன உத்தரவை பெற்று கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்