சென்னை கொலை வழக்கு : மதுரை கோர்ட்டில் இளைஞர் சரண்

சென்னை சாந்தோம் சாலையை சேர்ந்த விஜய் என்பவர் அக்டோபர் 21 -ல் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, மைலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-11-09 06:34 GMT
சென்னை சாந்தோம் சாலையை சேர்ந்த விஜய் என்பவர் அக்டோபர் 21-ல் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, மைலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மைலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்த நாகராஜ், மதுரை மாவட்ட மூன்றாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்துள்ளார். அவரை வருகிற 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு காயத்ரி தேவி உத்தரவிட்டார். வரும் 12 ஆம் தேதிக்கு பின்னர் அவரை சென்னை சிறைக்கு மாற்றவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்