முன்விரோதம் -மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரமணிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது

Update: 2018-10-28 20:22 GMT
* சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே  சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்த   வீரமணிக்கும்,  பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும்  முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அருகில் உள்ள கோயிலில்  பணம் வைத்து பழனிசாமியும், அவரது நண்பர்களும்  சீட்டு விளையாடியதாகத் தெரிகிறது.  இதை தட்டிக்கேட்ட  வீரமணியை  கடுமையாக தாக்கியதில் காயமடைந்த அவர், ஓமலூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை  
பெற்று வருகிறார்.

* இந்நிலையில்,  மருத்துவமனைக்குள் புகுந்த பழனிசாமியும், அவரது நண்பர்களும்  வீரமணியைத் தாக்கியுள்ளனர். இதுபற்றி புகார் அளிக்கப்பட்டதை அடுத்து,  பழனிசாமி, அவரது நண்பர்  செல்வம் ஆகியோரை ஓமலூர் போலீஸார் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்