கோடீஸ்வரர்களின் மகள்கள் 2 பேர் துறவறம்..!

திருவண்ணாமலையில் பல கோடி ரூபாய் சொத்துகளை துறந்து விட்டு இளம்பெண்கள் இருவர் துறவறம் மேற்கொண்டனர்.

Update: 2018-10-27 03:39 GMT
திருவண்ணாமலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, தர்மிசந்த் சவுகார் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாயார் குழுமம் என்ற பெயரில் நகைக் கடை, பைக், கார் விற்பனை நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு கோடீஸ்வரர்களாக உள்ள இந்த குடும்பத்தில் இருந்து இரண்டு இளம்பெண்கள் துறவறம் மேற்கொண்டுள்ளனர். எம்பிஏ முடித்துள்ள பிரேட்சா என்ற பெண்ணும் சிஏ முடித்துள்ள ஸ்வேதா என்ற பெண்ணும் 4 ஆண்டுகளுக்கு முன் துறவறம் செல்ல முடிவு செய்துள்ளனர். 
ஜெயின் மத வழக்கப்படி துறவற நடைமுறைகளை மேற்கொண்டு வந்த அவர்களை,முறைப்படி வழியனுப்பும் விழா, திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஆட்சியர் கந்தசாமி, நகைக்கடை அதிபர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்