எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ₨60 லட்சம் அபராதம்...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தூத்துக்குடி மீனவர்கள் எட்டு பேருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-16 11:03 GMT
கடந்த மாதம் 18-ஆம் தேதி, தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் அனைவரும் இன்று, கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக, எட்டு மீனவர்களுக்கும் தலா 60 லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள், அந்தோனி, ரூபின்சன், வில்பர்ட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், கோரத் முனியன், இசக்கிமுத்து ஆகியோர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்