துணை வேந்தர் நியமன முறைகேடு : சிபிஐ விசாரணைக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூர் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரே தெரிவித்துள்ள நிலையில் இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-14 14:14 GMT
தஞ்சாவூர் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரே தெரிவித்துள்ள நிலையில் இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு துணை தலைவர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர் தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் வரும் 28ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்