"நியூட்ரினோவிற்குஅனுமதி வழங்கவில்லை"- தமிழக அரசு

நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-10-09 05:38 GMT
* தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

* வழக்கின் இன்றைய விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

* திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மனு அளித்திருந்ததாகவும், அந்த மனுவை அரசு திருப்பி அனுப்பியதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த ஏப்ரல் மாதம் அரசு ஆய்வு நடத்தியதாகவும், அங்கு எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் பதில் மனுவை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்