ஜெனரேட்டர் பயன்படுத்தி தூங்கிய தாய், மகள் உயிரிழப்பு

மின் தடையால் ஜெனரேட்டரை பயன்படுத்தி வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாய், மகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-08 08:34 GMT
கரூர், ராமானுஜம் நகரைச் சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் வீட்டின் முன்பு ஜெனரேட்டரை இயக்கிவிட்டு, நேற்றிரவு ராஜாவின் மனைவி சுந்தரியும், 17 வயது மகள் ராகவியும் தூங்கியுள்ளனர்.

அப்போது, ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகை, டேபிள் பேன் மூலம் வீட்டிற்குள் சென்றுள்ளது. அந்த காற்றை சுவாசித்த சுந்தரி மற்றும் ராகவி இருவரும் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போலீசார், இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்