லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 6 பேர் கைது

ஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை அச்சிட்டு விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-08 07:57 GMT
ஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை அச்சிட்டு விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து தீவட்டிப்பட்டி, தாரமங்கலம் ஆகிய கிராமங்களில் சோதனை செய்த போலீசார், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுரேஷ்,  சரவணன், வெற்றிவேல்,  ராஜேந்திரன், நைனாகுமார், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி லாட்டரி சீட்டுக்கள், பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்