கனமழையால் ஊருக்குள் புகுந்தது வெள்ளம் - சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் துணை முதலமைச்சர்

போடி அருகே கனமழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்.

Update: 2018-10-07 23:23 GMT
போடி அருகே கனமழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார். கனமழையால் மூனாண்டிபட்டி பகுதியில் உள்ள வஞ்சி ஓடையில் காட்டாறு வெள்ளம் உருவாகி ஊருக்குள் புகுந்ததால் ஊர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதியை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உரிய உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்