ஆட்டோவில் பயணித்த சாரைப்பாம்பு : அலறி அடித்து இறங்கிய பயணிகள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஆட்டோ ஓட்டுனரான இவர், இன்று காலை அம்பாசமுத்திரத்தில் சவாரி ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

Update: 2018-10-07 11:37 GMT
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஆட்டோ ஓட்டுனரான இவர், இன்று காலை அம்பாசமுத்திரத்தில் சவாரி ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். நெல்லை பேட்டை அருகே ஆட்டோவின் எஞ்சின் பகுதியில் இருந்து, 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஆட்டோவிற்குள் வந்துள்ளது. இதனைப் பார்த்த பயணிகள் ஆட்டோவை நிறுத்துமாறு கூறி அலறியடித்து கீழே இறங்கினர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலை அடுத்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்