முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா - வருகின்ற 10 ஆம் தேதி கொடியேற்றம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா வருகின்ற 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

Update: 2018-10-06 22:27 GMT
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசை முத்தாரம்மன் கோயிலில் வெகு விமர்சையாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மஹிஷா சூரசம்ஹாரம் வரும் 19 ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. இதில் சிறப்பு அம்சமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, காளி, புலி, குரங்கு உள்ளிட்ட பல வேடங்கள் அணிந்து ஆடிபாடி வழிபட உள்ளனர்..
Tags:    

மேலும் செய்திகள்