பேக்கரி கடைக்குள் புகுந்து நொறுக்கு தீனிகளை வேட்டையாடிய கரடிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பேக்கரி கடைக்குள் புகுந்த கரடிகள் உணவுப்பொருட்களை தின்று கடையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-05 03:12 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பேக்கரி கடைக்குள் புகுந்த கரடிகள், உணவுப்பொருட்களை தின்று கடையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைகாட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் கரடிகள் புகுந்து, உணவு பொருட்களை தின்று சேதப்படுத்தியது. இதுதொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள் கொடுத்த தகவலின்படி, போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கரடிகள் நடமாட்டத்தை உறுதிப்படுத்தியதுடன், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்