பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்..
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள் : பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை நான்கு கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள வீரராகராவ் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற சுற்றுலா விழாவில் கலந்துகொண்ட பின் பாம்பன் பாலத்தை கப்பல் கடந்து செல்லும் காட்சியை கண்டு ரசித்தார்.