ஆதார் தீர்ப்பு - ஸ்டாலின் வரவேற்பு

ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-09-26 20:53 GMT
ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், பள்ளிகளுக்கும், நுழைவுத்தேர்வுகளுக்கும் ஆதார் கட்டாயம் இல்லை என்பது வரவேற்கத்தக்க மாற்றம் என கூறியுள்ளார். இந்த தீர்ப்பு, குடிமக்களின் தனி மனித உரிமைகளை முடக்கும் பிரிவுகளை நீக்கும் வகையில் இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்