ராமநாதபுரம் : மண்டபம் முகாமில், அதிநவீன விரைவு கப்பல் சேர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு, அதிநவீன விரைவு கப்பல் கொண்டு வரப்பட்டுள்ளது.

Update: 2018-09-15 02:03 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு, அதிநவீன விரைவு கப்பல் கொண்டு வரப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடத்தலை தடுக்கவும், சமூக விரோத செயல்களை கண்காணிக்கவும் காரைக்கால் கடலோர காவல் படை முகாமில் இருந்து இந்தக் கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளது. புதிய கப்பலை மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மண்டபத்தில் 5 ஹோவர் கிராப்ட் கப்பல்கள் பணியில் உள்ள நிலையில் கூடுதலாக அதிநவீன ரேடார் வசதியுடன் இந்தக்கப்பல் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்