வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நகர ஊரமைப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-12 07:22 GMT
வேலூர், சத்துவாச்சாரியில் இயங்கி வந்த ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத   3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, அவர்கள் லஞ்சம் வாங்குவதற்கென தனியாக அலுவலகம் ஒன்றை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நகர ஊரமைப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்