ஓமலூர் : பழுதான ஏ.டி.எம் குறித்து தந்தி டிவி-யில் செய்தி வெளியானதன் எதிரொலியாக புதிய ஏ.டி.எம்

கடந்த 27 ஆம் தேதி தந்தி டிவியில், சேலம் மாவட்டத்தில் பழுதான ஏ.டி.எம் குறித்து செய்தி வெளியானதன் எதிரொலியாக புதிய ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது

Update: 2018-09-11 12:01 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னத்திருப்பதியில் கடந்த சில மாதங்களாக ஏ.டி.எம். இயங்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்த பொது மக்கள் ஒவ்வொரு முறையும் 40 ரூபாய் கட்டணமாக எடுத்துக் கொள்வதாக வேதனை தெரிவித்தனர். 

இது தொடர்பாக கடந்த 27ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது புதிய ஏ.டி.எம். நிறுவப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிவாசிகள் தந்தி டிவிக்கு நன்றி தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்