குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய காவலரின் மனைவி...
தேனி மாவட்டம் கம்பத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றிவரும் அழகுத்துரை என்பரது மனைவி, தனது இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றிவரும் அழகுத்துரை என்பரது மனைவி, ஜெயமணி, தனது இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில், ஜெயமணி குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.