ஜெயலலிதா உடல் நல அறிக்கைகளை தயாரித்தது மருத்துவக்குழு மட்டுமே - அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன்

ஜெயலலிதாவை பரிசோதனை கூடத்திற்கு அழைத்து செல்லும் போது மட்டுமே சிசிடிவி கேமிராக்கள் நிறுத்தப்பட்டதாகவும், மற்ற நேரத்தில், அவை முழுமையாக இயங்கியதாகவும் ஆணையத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-09-08 00:10 GMT
இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், ஜெயலலிதா சிகிச்சை குறித்த அறிக்கைகளை மருத்துவக்குழு தயாரித்து வெளியிட்டதாகவும் தாம் அதில் கையெழுத்து மட்டுமே இட்டதாகவும் கூறினார். மேலும், ஜெயலலிதாவை பரிசோதனை கூடத்திற்கு அழைத்து செல்லும் போது மட்டுமே சிசிடிவி கேமிராக்கள் நிறுத்தப்பட்டதாகவும், மற்ற நேரத்தில், அவை முழுமையாக இயங்கியதாகவும் ஆணையத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்