தியேட்டர்களில் விற்கப்படும் உணவுபொருட்கள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை என அரசு அறிவித்துள்ளது

எம்.ஆர்.பி.யை விட அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

Update: 2018-09-07 23:44 GMT
தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்களில் பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சினிமா தியேட்டர்களில், சோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் படி, அதிகபட்ச விலையை விட, உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்ற 114 கேன்டீன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்