ஆட்டோ ஓட்டுனரால் ஏமாற்றப்பட்ட 17 வயது மாணவியின் கருவை உடனடியாக கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தாய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Update: 2018-09-07 18:55 GMT
ஆட்டோ  ஓட்டுனரால் ஏமாற்றப்பட்டு, காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள தன் 17 வயது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி கோரி திருப்பூரைச் சேர்ந்த பெண்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, மாணவியின் கருவை கலைப்பது குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் உடல் நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை படித்து பார்த்த நீதிபதிகள், மாணவியின் வயிற்றில் வளரும் கருவை உடனடியாக கலைக்க வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும், அதுதொடர்பான அறிக்கையை செப்டம்பர் 11ம் தேதி தாக்கல் செய்யவேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்