குடும்ப தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு ? - 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
தெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை காசிமேடு மார்கெட் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. முன்னாள் கப்பல் ஊழியரான இவர், நேற்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த தெய்வசிகாமணியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். தெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.