குடும்ப தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு ? - 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்

தெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-09-06 23:23 GMT
சென்னை காசிமேடு மார்கெட் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. முன்னாள் கப்பல் ஊழியரான இவர், நேற்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல்  அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த தெய்வசிகாமணியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். தெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்