குடும்ப தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி

திருவள்ளூர் அருகே குடும்ப தகராறு காரணமாக ஒரு தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-09-06 13:12 GMT
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ ஒட்டுநரான இவருக்கும் இவரின் மனைவி சுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் பிரச்சினை அதிகமான நிலையில் இருவரும் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பெற்றோரின் அருகில் படுத்து தூங்கிய இவர்களின் 7 வயது மகள் லோகிதா, தாயும் தந்தையும் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக போ​லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்