50% சம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் 10-வது நாளை எட்டியது

Update: 2018-09-04 07:40 GMT
* விருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. 

* ஆனால் 30 நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும், விசைத்தறி உரிமையாளர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்தாண்டு சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டி, சம்பள உயர்வு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.  
Tags:    

மேலும் செய்திகள்