சாந்த லிங்க ராமசாமி அடிகளார் காலமானார்

கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

Update: 2018-09-01 02:48 GMT
* கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. மடாலாய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அடிகளாரின் உடலுக்கு, அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆன்மீக சான்றோர் , தமிழறிஞர்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வந்து, இறுதி அஞ்சலி செலுத்தினர்.

* மாலையில், மடாலாயத்தில் உள்ள நடராஜர் ஆலய வளாகத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.

* கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மிகப் பணி மட்டுமின்றி மிகச்சிறப்பாக தமிழ் பணியையும் ஆதீனம் மேற்கொண்டதாக கூறியுள்ளார். 

* மேலும்,  தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுத்ததோடு, கொங்கு மண்டலத்தில் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்