எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கால்நடை பூங்கா - உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
* திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
* மேலும் தார்ச்சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர், புக்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் முதல் முறையாக 1600 ஏக்கர் பரப்பளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.