தொடரும் கத்தி கலாச்சாரம் : 'பட்டா கத்தி' மாணவர்களைத் தேடும் போலீஸார்

சென்னையில் பேருந்து படிக்கட்டில் நின்றபடி, கல்லூரி மாணவர்கள், பட்டாக்கத்தியை தேய்த்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-31 03:54 GMT
சென்னை பிராட்வேயில் இருந்து காரனோடைக்குச் செல்லும், 57 எஃப் வழித்தட பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களின்  'கத்தி' சாகசம் ஒரு வாரத்துக்கு முன்பு அரங்கேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு முன்பு ரயிலில் கத்தியுடன் உலா, ரயில் நிலையங்களில் கத்திச் சண்டை என மாணவர்களின் போக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பேருந்தில், மாணவர்களின் கத்தி கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்