பேருந்தில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் பயணம்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-30 06:57 GMT
* சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

* சென்னை பிராட்வேயிலிருந்து காரனோடைக்குச் செல்லும் 57 எஃப் வழித்தட பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களின்  'கத்தி' சாகசம் ஒரு வாரத்துக்கு முன்பு அரங்கேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

* இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். முன்பு ரயிலில் கத்தியுடன் உலா, ரயில் நிலையங்களில் கத்திச் சண்டை என மாணவர்களின் போக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பேருந்தில் மாணவர்களின் கத்தி கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்