குழந்தை திருட வந்தவர் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி...

கோவை அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல விடுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், குழந்தையை திருட முற்சித்ததாக கூறப்பட்டு அவருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.

Update: 2018-08-30 02:48 GMT
கோவை அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல விடுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், குழந்தையை திருட முற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை பிடித்த காவலாளிகளும், பொதுமக்களும் தர்ம அடி கொடுத்தனர். இதன் பின்னர், காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்பதும் தெரிந்தது. அவர் குழந்தையை திருட முயற்சிக்கவில்லை என தெரிய வந்ததையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்