மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி ரெய்டு

சென்னையில் உள்ள மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-08-29 08:58 GMT
தேனாம்பேட்டையில் இயங்கி வரும் ட்ரைஜென் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் கொண்ட வருமானவரித் 
துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனமானது பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில், சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்