3-வது நாளாக கல்லணை கால்வாய் தூர்வாரும் பணி

கல்லணை கால்வாயில் படிந்துள்ள மணலை அகற்றும் பணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-08-28 13:03 GMT
கல்லணை கால்வாயில் படிந்துள்ள மணலை அகற்றும் பணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கல்லணையில் இருந்து  கடந்த 22 ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கல்லணை கால்வாயின் நீர் திறப்பு பகுதியில் 200 முதல் 300 மீட்டர் தொலைவுக்கு 20 அடி அகலஙம அளவில் மணல் மூடியுள்ளதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதனையடுத்து, மணலை அகற்றும் பணி, மூன்றாவது நாளாக இன்றும் தொடருகிறது. தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் மிதவை ஜேசிபி மூலமாக மணல் அகற்றும் பணி நடைபெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்