கட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-27 09:17 GMT
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் நாகப்பா சாலையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் நாகக்குடி கிராமத்தை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் ரூபாய் 2 லட்ச ரூபாய் கட்டியுள்ளார். ஏலம் முடிந்த பின்னரும் நிதி நிறுவனம் அந்த பணத்தை திரும்ப தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் கையில் பெட்ரோல் கேனுடன் தனது குடும்பத்தினருடன் வந்து நிதி நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயன்றார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்