எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்
எம்ஜிஆர் நூற்றாண்டு படபிடிப்பு தளத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி, விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
சென்னை பையனூரில் தமிழக அரசு சார்பில் திரைக்கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட 65 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த படபிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, படப்பிடிப்பு தளத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.
"விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும்" - முதலமைச்சர் பழனிச்சாமி
"எம்.ஜி.ஆர். பெயரில் படப்பிடிப்பு தளம் இந்திய திரையுலகிற்கே பெருமை" - பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தள திறப்பு விழாவில் திரையுலக பிரபலங்கள் பேசியதை தற்போது பார்க்கலாம்...
"எம்.ஜி.ஆர் என்ற பெயருக்கு தோல்வியே இல்லை" - சிவகார்த்திகேயன்
"தொழிலாளர்களால் தான் சினிமா வாழ்கிறது" - விஜய் சேதுபதி
"தொழிலாளிகள் இப்போது முதலாளிகளாகி இருக்கிறார்கள்" - கார்த்தி
"நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ஊக்கம் இந்த விழா" - விஷால்
"வேற்றுமையை களையும் குறியீடாக இந்த விழா" - நாசர்
"குறும்படங்களை காப்பாற்ற தமிழக அரசு சிறிய திரையரங்குகளை அமைக்க வேண்டும்" - விக்ரமன்