"நீர்ப்பாசன பெருந்திட்டத்தை அறிவிக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சுதந்திர தின உரையில் நீர்ப்பாசன பெருந்திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-08-14 07:04 GMT
சுதந்திர தின உரையில் நீர்ப்பாசன பெருந்திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீரை சேமிக்கும் வகையில் காவிரி, சரபங்கா ஆறு, திருமணிமுத்தாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுபோல அத்திக்கடவு - அவினாசித் திட்டம், விழுப்புரம் நந்தன் கால்வாய் திட்டம், தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்