சென்னையில் ராகுல் காந்தி பாதுகாப்பில் குளறுபடி- வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Update: 2018-08-14 02:50 GMT
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கிற்கு காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். 

போலீசாரின் அஜாக்கிரதையால் ராகுல்  பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான மூன்று பேருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்