புதிய தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்றத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற தஹில் ரமானிக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-08-13 08:50 GMT
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற தஹில் ரமானிக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தஹில் ரமானி, இந்திய அளவில் இரண்டாவது  மூத்த நீதிபதி என குறிப்பிட்டார். இதையடுத்து, பல்வேறு வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பேசினர். 

வரவேற்பை ஏற்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, 'வணக்கம்' என தமிழில் கூறி பேச்சை தொடங்கினார். அப்போது, '150 ஆண்டு பாரம்பரியம் மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக கூறினார். திருவள்ளுவர் போன்ற அறிஞர்களையும் ராதாகிருஷ்ணன், ராஜாஜி தொடங்கி அப்துல் கலாம் வரை முக்கிய தலைவர்களையும் தமிழகம் தந்துள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்