தேன் எடுக்கச் சென்ற போது விபரீதத்தில் மாட்டிய இளைஞர்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தேன் எடுக்க முயன்ற போது தேனீக்கள் தாக்கியதில் கிணற்றில் விழுந்த நபரை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Update: 2018-08-13 08:31 GMT
தோகைமலை அருகே உள்ள ஊர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னசாமி தேன்கூட்டில் இருந்து தேன் எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தேனீக்கள் தாக்கியதில், அருகில் இருந்த 70 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்ததில் சின்னசாமிக்கு கால் உடைந்தது. சின்னசாமியின் குரலைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் தேனீக்கள் தொடர்ந்து தாக்கியதால் அப்பகுதி மக்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனிடையே மணப்பாறை தீயணைப்புத் துறையினர், தேனீக்களை விரட்டி அடித்த பின்னர், கிணற்றில் இருந்த சின்னசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்