100 வயது பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய உறவினர்கள்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 100 வயதான மூதாட்டியின் பிறந்தநாளை அவரது உறவினர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Update: 2018-08-12 06:38 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, இவரது கணவர் பரமசிவம் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் சுப்புலட்சுமி தனது மகள்களின் வீட்டில் வசித்து வருகிறார். 
உடல் ஆரோக்யத்துடன் உள்ள சுப்புலட்சுமி இந்த வயதிலும் தன் வேலைகளை தானே செய்கிறார். 

காலை 5 மணிக்கு எழுவது முதல் அன்றாட பணிகள் அனைத்தையும் யாருடைய உதவியும் இல்லாமல் அவர் செய்கிறார். சுப்புலட்சுமி, 100 வயதான மூதாட்டி கண்ணாடி அணியாமல் நன்றாக பேப்பர் வாசிக்கும் சுப்புலட்சுமியை அனைவரும் ஆச்சரியத்துடனே பார்க்கின்றனர். 

100 வயதை எட்டிய இவருக்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாளை வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர். சந்திரா, சுப்புலட்சுமியின் மகள் 9 பேரன்கள், 4 பேத்திகள், 16 கொள்ளு பேரன்கள் புடை சூழ சுப்புலட்சுமி தன் பிறந்தநாளை மகிழ்ச்சியான தருணமாக மாற்றிக் கொண்டார். விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட சொந்தங்கள் அவரிடம் ஆசியும் பெற்றுச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்