கொடைக்கானலில் மனதை கொள்ளையடிக்கும் ரம்மியமான காட்சிகள்

கொடைக்கானல் மலை தொடர்களில்,இலக்கியங்களில் இடம்பெற்ற அரிய வகை குறிஞ்சு மலர்கள் பூத்து குலுங்கும் காட்சிகள் மிகவும் ரம்மியமாக உள்ளது.

Update: 2018-08-04 05:09 GMT
சில்லென்று வீசும் குளிர்ந்த காற்று மெய் சிலிர்க்க வைக்கும் எழில் ஓவியங்கள் என கொடைக்கானல் மலையில் பல இயற்கை அற்புதங்கள் காணக்கிடக்கின்றன.மனதை மயக்கும் இந்த இயற்கை காட்சிகளுக்கும் மேலும் அழகு சேர்க்கிறது குறிஞ்சி மலர்கள்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகையான இந்த மலர், கொடைக்கானலில் உள்ள பழனி மலைத்தொடர்களில் பூத்து குலுங்குகிறது.

பசுமையான மலை சரிவு முழுவதும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளதால்,தொலைவில் இருந்து பார்க்க, அந்த மலையே நீல நிற கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது.குறிஞ்சி சீசனை தொடர்ந்து, மலைவாழ் மக்கள் தேன் சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிஞ்சி மலர்களின் கொள்ளை கொள்ளும் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில், விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்