பள்ளி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது

காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-08-02 06:09 GMT
காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை,போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனியில், அந்த பள்ளி மாணவியை பேஸ்புக் மூலமாக காதலித்து வந்த விக்னேஷ், மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்