பல்வேறு தோல்விகளை தாண்டி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவன்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கண சாலை கிராமத்தை சேர்ந்த இவர் குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.

Update: 2018-08-02 03:52 GMT
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கண சாலை கிராமத்தை சேர்ந்த இவர், குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார். காடையாம்பட்டி மற்றும் இளம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிரபுதேவா, தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துள்ளார். தொடர்ந்து எஸ்.ஐ. தேர்வில் வெற்றிபெற்ற பிரபுதேவா, உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

 இதேபோன்று, குரூப் 4 மற்றும் குரூப் 2 , அஞ்சல்துறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், அடுத்தக்கட்ட தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் மனம் தளராமல் தமது பெற்றோருடன் விசைத்தறி தொழில் செய்து கொண்டே குரூப் 4 தேர்வை எழுதியுள்ளார். இதில் 300-க்கு 274 புள்ளி 5 மதிப்பெண்கள் பெற்று பிரபுதேவா, மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார் 
Tags:    

மேலும் செய்திகள்