இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

உளுந்தூர் பேட்டையில் இருசக்கரவாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சிகளை வைத்து போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.

Update: 2018-08-01 12:54 GMT
உளுந்தூர் பேட்டையில் இருசக்கரவாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சிகளை வைத்து போலீசார் திருடனை தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமி புரத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமானதை தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் அருகில் இருந்த பைக்குகளில் இருந்து பெட்ரோலை திருடி, இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்